Nagaratharonline.com
 
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், தீமிதி திருவிழா  Apr 26, 11
 
பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல், தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல், பால்குடம் எடுத்தல் விழா நடைபெற்றது. காட்டுப்பட்டி, உசிலம்பட்டி, வேகுப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து மக்கள் பூத்தட்டு, பால்குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திங்கள்கிழமை பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப். 26) காப்பு கட்டுதலும், புதன்கிழமை (ஏப். 27) தீப்பந்தம் பிடித்தலும் நடைபெறவுள்ளன.

source : Dinamani