Nagaratharonline.com
 
மே 27 - காரைக்குடியில் செட்டிநாடு கட்டடப் பொருள்கள் கண்காட்சி-2011  Apr 26, 11
 
Last Updated :


காரைக்குடி,ஏப். 25: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட அளவில் முதன் முறையாக மே 27 முதல் 29 வரை 3 நாள்கள் காரைக்குடி கட்டுமானப் பொறியாளர் கள் சங்கம் சார்பில் செட்டிநாடு கட்டடப் பொருள்களின் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து காரைக்குடி கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியது:

காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் மாபெரும் கட்டட உபபொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் நடத்த முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு இலவச அனுமதியளிக்கப்படும்.

இக்கண் காட்சியில் சிமெண்ட், கம்பி, செங்கல், கிரானைட், மார்பிள், டைல்ஸ் மற்றும் நவீன வீட்டு அலங்காரப்பொருள்கள் என 40-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பார்வைக்கு வைக்கின்றனர்.

இதில் காரைக்குடி கட்டடப் பொறியாளர் சங்கத்தின் அரங்கும் அமைக்கப்படும். இதில் கட்டடங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இந்தக் கண்காட்சியில் இடம்பெறவிரும்பும் வர்த்தக நிறுவனங்கள் அரங்குகளுக்கு முன்பதிவு செய்துகொள்வதற்கும், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் பொருள்கள் பற்றி விளம்பரம் செய்துகொள்வதற்கும் திட்டத்தின் தலைவர் பொறியாளர் ஏ.ராஜா செல்: 9443136364 என்ற எண்ணிலும், மற்றொரு தலைவர் பொறியாளர் எம்.அசோக்குமார் செல்: 9443129044 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

source : Dinamani