Nagaratharonline.com
 
காரைக்குடி நூலகத்தில் மழை நீர் : வாசகர்கள் அவதி  Apr 26, 11
 
காரைக்குடி நூலகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் வாசகர்கள் அவதிக்குள்ளாகினர்.
ராமசாமி செட்டியார் வீதியில் தனியார் கட்டடத்தில் இயங்கும் நூலகத்தில் 38,000 புத்தகங்கள் உள்ளன. குறுகலான இடத்தில் மாடியில் செயல்படுவதால், புத்தகங்கள் வைப்பதற்கு போதிய வசதிகள் இல்லை. தரை, பெஞ்சுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பின்றி பல புத்தகங்கள் தொலைந்தும், சேதமடைந்தும் போயின. சிறு மழைக்கு கூட தண்ணீர் தேங்கி விடும். பழுதடைந்த கட்டடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் பெய்த கன மழையால் நீர் கசிவு ஏற்பட்டு நூலகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. சுவர் முழுவதும் ஈரம் படிந்து புத்தகங்கள் சேதம் அடைந்துள்ளன. தண்ணீர் தேங்கிய போதும், வாசகர்கள் வந்து செல்கின்றனர்.

வாசகர் ஒருவர் கூறுகையில், ""சுவரில் ஆங்காங்கே விரிசல் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் புகுந்து விடுகிறது. தரையில் உள்ள புத்தகங்கள் ஈரம் படித்து சேதமாகின்றன. புத்தகங்களை காப்பாற்ற புதிய கட்டடம் கட்ட வேண்டும்,'' என்றார்.

source : Dinamalar