Nagaratharonline.com
 
ஒரே நாளில் தங்கரத புறப்பாட்டிற்கு 235 பேர்.  Apr 22, 11
 
பழநி கோயில் தங்க ரத புறப்பாட்டிற்கு ஒரே நாளில் 235 பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

மதுரை, திருத்தணி, சுவாமிமலை, சமயபுரம், திருச்செந்தூர், ஈச்சனாரி, திருவேற்காடு உள்ளிட்ட கோயில்களில் தங்கரதம் இருந்தாலும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி தினந்தோறும் தங்க ரத புறப்பாடு செய்யும் பெருமை பழநி கோயிலுக்கு மட்டுமே உள்ளது. தினமும் இரவு 7 மணிக்கு மேல் பழநி மலை கோயிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறும். ஒரே நாளில் 219 பக்தர்கள் காணிக்கை செலுத்தி தங்க ரத புறப்பாடு செய்தது பழநி கோயில் தங்க ரதத்தின் சாதனையாக இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 235 பக்தர்கள் தங்க ரத புறப்பாட்டிற்கு காணிக்கை செலுத்தியிருந்தனர்.நேற்று தங்க ரத புறப்பாட்டின் மூலம் பழநி கோயிலுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

source : Dinamalar