Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் தீத் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்  Apr 22, 11
 
பொன்னமராவதி, ஏப். 18: பொன்னமராவதியில் திங்கள்கிழமை தீயணைப்புத் துறையினர் தீத் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் யு.பி. கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில், பேரிடர் தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், பிரசாரத்தின் போது தீத் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.


source : Dinamani