Nagaratharonline.com
 
தேவகோட்டை : திறக்கப்படாமல் உள்ள போலீஸ் நிழற்குடை  Apr 22, 11
 
தேவகோட்டை, ஏப். 20: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பஸ் நிலைய நுழைவுவாயிலில் சில மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்து போலீஸôருக்கான நிழற்குடை ஒன்று நிறுவ முடிவு செய்யப்பட்டது.

இதற்காக காரைக்குடியைச் சேர்ந்த சைக்கிள் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அங்கு போக்குவரத்து போலீஸ் நிழற்குடை நிறுவப்பட்டது. இது நிறுவப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதன்பிறகு, போக்குவரத்தைச் சரிசெய்ய இரண்டு போலீஸôர் காரைக்குடியிலிருந்து பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்கள் இதுவரை அந்த நிழற்குடையைப் பயன்படுத்தவில்லை. இந்த நிழற்குடையை விரைவில் பயன்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், போக்குவரத்து நெரிசல் மிக்க இடமான ஆர்ச் பூங்கா அருகில் போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டும். அந்த இடம் நான்கு சாலைகள் சந்திக்கும் இடம். அங்கு போக்குவரத்து நிழற்குடையும் காவலரும் அவசியம் தேவை என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


source : Dinamani