Nagaratharonline.com
 
வயிரவன்பட்டியில் வெள்ளி ரதம்  Apr 22, 11
 
வயிரவன்பட்டி வயிரவர் கோவிலுக்கு 70 லட்ச ரூபாயில் வெள்ளி ரதம் செய்யும் பணி துவங்கியது. இக்கோவில் நகரத்தார் சார்பில் பணி நடக்கிறது.

நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வயிரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது; அழகு ஆசாரி தலைமையில் தச்சு பணி துவங்கியது. மர ரத பணிகள் நிறைவடைந்த பின், 100 கிலோ வெள்ளி தகடுகள் பதிக்கப்படும். மூன்று மாதத்தில் பணிகள் நிறைவுற்று, ஆடி மகா உற்சவத்தில் வெள்ளி ரத வீதி உலா நடைபெறும். துவக்க பணியில் தலைவர் சிதம்பரம் , இணை செயலாளர் பழனியப்பன், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் ராமசாமி, மாத்தூர் தேர் திருப்பணிக்குழு தலைவர் வள்ளியப்பன், ஆறுமுகம், நாகப்பன் பங்கேற்றனர்.

source : Dinamalar