Nagaratharonline.com
 
தேவகோட்டை நகர சிவன் கோவில் தேரோட்டம்.  Apr 18, 11
 
தேவகோட்டை, ஏப். 16: தேவகோட்டை நகர சிவன் கோவில் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நகரத்தார்களுக்குச் சொந்தமான சிவன் கோவில் தேரோட்டத்தை ஜமீன்தார் சோம.நாராயணன் செட்டியார் வடம் பிடித்துத் துவக்கி வைத்தார்.

முதலில் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் செல்ல அதைத் தொடரந்து

மீனாட்சி சுந்தரேஸ்வரர் அமர்ந்திருக்கும் தேர் செல்ல இறுதியாக மீனாட்சி அம்பாள் அலங்காரத்துடன் இருக்கும் தேர் சென்றது.

சுவாமிகளுக்கு ரவி குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்தனர். இதில் தேரின் ஒரு பகுதியை முழுவதும் பெண்களே வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை நகர் சார்பு ஆய்வாளர்கள் புவனேஸ்வரி, கருப்பையா, சந்திரசேகர், லெட்சுமணன், நாகரெத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.


source ; dinamani