Nagaratharonline.com
 
: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தேரோட்டம்  Apr 18, 11
 
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவ விழா தேரோட்டம் நேற்று நடந்தது கடந்த ஏப்.9ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினமும் இரவு பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். நேற்று பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்க பல்லக்கில் திருவீதி உலா வந்தார். தேரோட்டம்: விழாவின் 10ம் நாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு, காலை 9 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 4.20 வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதற்கு பின் நான்கு ரத வீதிகளையும் சுற்றி, தேர் நிலையை அடைந்தது. இன்று (ஏப்.19) இரவு சுவாமி பூப்பல்லக்கு உற்சவத்துடன் பிரமோத்ஸவ விழா நிறைவடையும்.

source : dinamalar.