Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்  Apr 15, 11
 
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நேற்று காலை 4.30 மணிக்கு பள்ளியறையில் திருப்பனந்தாள் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மருதீசருக்கு சிறப்பு ஆராதனை, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. விநாயகர் தங்க அங்கியில் காட்சி அளித்தார். விநாயகர், மருதீசர் சன்னதிகளில் இருந்து அங்குச, சூலாயுத தேவர்கள் எழுந்தருளினர்.

கோயில் ஊரணியில் காட்சி அளித்த அங்குச, சூலாயுத தேவருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நிர்வாக அறங்காவலர்கள் வி.ராமநாதன், ராம.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிச்சை குருக்கள் தலைமையில் சோமசுந்தர குருக்கள் பூஜை செய்தார். அதை தொடர்ந்து சுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். இரவு உற்சவ விநாயகர் மூஷிக வாகனத்தில், காட்சி அளித்தார். இச்சன்னதியில், பஞ்சாங்கம் வாசித்தனர். பின்னர் உற்சவர் கோயில் வலம் வந்து சன்னதி எழுந்தருளினார். வணிகர்கள் கோயிலில் புதிய கணக்குகளை துவக்கினர்.

source : Dinamalar