Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் சித்ரா பவுர்ணமி உற்சவம்  Apr 14, 11
 
நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா, ஏப்., 16 ல் துவங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு சித்ரா பவுர்ணமி விழா துவங்குகிறது. ஏப்., 17 அன்று காலை 8 மணிக்கு, திருமஞ்சனம், காலை 11 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கும். அன்று மாலை 5.30 மணிக்கு வெள்ளி கேடகம்; ஏப்.,18 அன்று காலை 9 மணிக்கு, குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார். அன்று காலை 10 மணிக்கு ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருமஞ்சனம்; இரவு 8 மணிக்கு தசாவதாரம் நடக்கும்.


ஏப்., 19 அன்று காலை 11 மணிக்கு, மாணிக்கவல்லி விநாயகர் கோயிலில், தீர்த்தவாரி; மாலை 6 மணிக்கு தங்க கருடசேவை புறப்பாடு நடக்கும்.

source : Dinamalar