Nagaratharonline.com
 
ஏப்ரல் 21-ல் திருநீர்மலை பெருமாள் கோவில் குடமுழுக்கு  Apr 11, 11
 
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு ஏப்ரல் 21 அன்று நடைபெறவுள்ளது.

குடமுழுக்குக்கான பூர்வாங்க பூஜைகள் மற்றும் யாகங்கள் ஏப்ரல் 19 ம் தேதி துவங்குகின்றன. வைகானச ஆகம விதிப்படி நடைபெறும் குடமுழுக்கு வைபவங்கள், புதுவயல் வரத பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெறுகின்றன.

ஏப்ரல் 21 ம் தேதி காலை 8-30 மணியளவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இரவு உற்சவர் திருவீதியுலா நடைபெறுகிறது.

மேலும் தகவல்களுக்கு 044-22385484, 9282125428

source : Dinamani