Nagaratharonline.com
 
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் விஷு கனி  Apr 8, 11
 
சென்னை, ஏப். 8: சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏப்ரல் 15-ந்தேதி விஷு கனி தரிசனம் நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் விஷு கனி தரிசனமும், 4.30 மணிக்கு விஷு காணிக்கை பிரசாதமும் (விஷு கை நீட்டம் ரூ.1) வழங்கப்படும்.

மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும் அதனை தொடர்ந்து பத்மஸ்ரீ கலா மண்டலம் ஷேமாவதி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுவதாக கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.


source : Dinamalar