Nagaratharonline.com
 
விரைவில் புதிய பத்து ரூபாய் நாணயம்  Mar 29, 11
 
 
சென்னை: விரைவில் புதிய பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. ரிசர்வ் வங்கியின் 75வது ஆண்டையொட்டி இந்த புதிய நாணயம் வெளியிடப்படுகிறது.


அசோகசக்கரத்தில் உள்ள சிங்க முகம் நாணயத்தின் மையத்தில் இடம் பெற்றிருக்கும். மேலும் அதற்குக் கீழ் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.

மேலும், நாணயத்தின் மேலும் கீழும், பாரத் என்று இந்தியிலும், இந்தியா என்று ஆங்கிலத்திலும் வாசகம் இடம் பெற்றிருக்கும்.

நாணயத்தின்மறுபக்கத்தில் பனை மரமும், அதன் கீழ் புலிச் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். இது ரிசர்வ் வங்கியின் சின்னமாகும். அதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். அதேபோல பிளாட்டினம் ஜூபிளி என்ற வார்த்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்றிருக்கும். அதனுடன் 1935-2010 என்ற வருடமும் இடம்பெற்றிருக்கும்.