Nagaratharonline.com
 
திருப்புத்தூர் தொகுதியின் பிள்ளையார்பட்டி சென்டிமென்ட்  Mar 29, 11
 
திருப்புத்தூர் தொகுதி தி.மு.க.,- அ.தி.மு.க., வேட்பாளர்கள், பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கினர். திராவிட கட்சிகள், கடவுள் மறுப்பு கொள்கையை (மறைமுகமாக) வலியுறுத்தினாலும், தேர்தல் நேரத்தில் அதை மறந்து விடுவது வழக்கம். அக்கட்சிகளின் வேட்பாளர்கள் கோயில்களில் இருந்தே பிரசாரத்தை துவக்குகின்றனர். திருப்புத்தூர் தொகுதியும், இதற்கு விதி விலக்கல்ல.

புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்ட பின்னரே பிரசாரம் துவக்குவது வழக்கமாகி விட்டது. இந்த தேர்தலிலும், அமைச்சர் பெரியகருப்பன், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜகண்ணப்பன் இருவரும், பிள்ளையார்பட்டியில் இருந்தே பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.

நேற்று முன் தினம் அஷ்டமி என்பதால், திட்டமிட்டதற்கு முன்பே, அமைச்சர் சுவாமி தரிசனம் முடிந்து பிரசாரம் துவக்கினார். அதே போல நேற்று காலை ராகு காலம் முடிந்து 9 மணிக்கு மேல் தரிசனத்தை முடித்து, ராஜகண்ணப்பன் பிரசாரம் துவக்கினார்.

கற்பக விநாயகர் யாருக்கு அருள் புரிய போகிறாரோ?

source : dinamalar