Nagaratharonline.com
 
திருப்பத்தூர்: தி.மு.க. வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு  Mar 28, 11
 
திருப்பத்தூர், மார்ச் 27: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன், ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார்பட்டியில் விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, சிறுகூடல்பட்டி சமத்துவபுரம்,ஊர்குளத்தான்பட்டி.

கும்மங்குடிபட்டி, தென்கரை, கிளாமடம், அதிகரம்,குடிகாத்தான்பட்டி, சிராவயல், மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தில் அவருடன் மாவட்டத் துணைச் செயலர் மணிமுத்து, திருப்பத்தூர் ஓன்றியச் செயலர் செழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.ரவி, துணை அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் இ.எம்.எஸ்.அபிமன்யு உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வாக்கு சேகரித்த அமைச்சர் பெரியகருப்பனிடம் பெண்கள் இலவச எரிவாயு இணைப்பு சரிவர வழங்கப்படவில்லை என்றும், சாலை சீர்செய்யப்படவில்லை என்றும் புகார் கூறினர்.

வரும் 5 ஆண்டுகளில் உங்கள் தேவைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றும், தமிழக முதல்வரின் இலவச திட்டங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

Source:Dinamani