Nagaratharonline.com
 
மீனாட்சி கோயிலுக்கு ஐ.எஸ்.ஒ.,சான்று :எதிர்த்து சுப்பிரமணியசாமி வழக்கு  Mar 28, 11
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஐ.எஸ்.ஒ., தரச்சான்று வழங்கியதை எதிர்த்து, விரைவில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும்,'' என, ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.

அவர் கூறியதாவது: முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெற்று கொடுத்தேன். முதல்வர் கருணாநிதி சுயநலத்தால், அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியலமைப்பு சட்டப்படி, மதவழிபாட்டு தலங்கள் எப்படி அமைய வேண்டும்? என வரையறுக்க முடியாது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைப்பு மூலம் மீனாட்சி கோயிலுக்கு ஐ.எஸ்.ஒ., தரச்சான்றிதழ் வழங்கியதன் மூலம், பக்தர்களின் மனதை அரசு புண்படுத்தியுள்ளது. சர்ச், மசூதிகளுக்கு சான்றிதழ் வழங்க முடியுமா? இதை எதிர்த்து விரைவில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

source : Dinamalar