Nagaratharonline.com
 
இரணியூர் - இலக்கிய கழக துவக்க விழா  Nov 5, 09
 
திருப்பத்தூர், நவ. 4: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள நகரத்தார்களின் ஒன்பது கோயில்களில் ஓன்றான இரணியூர் செண்பகம்பேட்டையும் ஒன்று.

இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய கழக தொடக்க விழா கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.

கயிலைமணி நீலா பக்தி பாடல் பாடினார். தலைமை ஆசிரியர் சுடலை வரவேற்புரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்

நலைச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னழகு நடராஜன் முன்னிலை வகித்து வாழ்த்துரையாற்றினர்.

ந.முருகப்பன் அறிமுகவுரையாற்றினார். கவிஞர் அரு.சோமசுந்தரன் இலக்கிய இன்பம் பற்றி நகைச்சுவை பேருரையாற்றினார். இலக்கிய


மன்றச் செயலர் சா.கண்ணம்மாள் பள்ளியின் முன்னேற்றம் பற்றி எடுத்துரைத்தார்.

Source : Dinamani - 5/11/2009