Nagaratharonline.com
 
சிறுவாபுரியில் லட்சார்ச்சனை  Mar 17, 11
 
:சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் 20ம் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. சென்னையில் இருந்து 35 கி.மீ., தொலைவில் கவரப்பேட்டை அருகே உள்ளது சிறுவாபுரி கிராமம். இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோவிலை பாடியுள்ளார்.

சென்னையில் பல இடங்களில் இருந்து வரும் பக்தர்கள்,வழிபாட்டுக் குழுக்களை அமைத்து, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். இந்தவகையில், செட்டிநாடு சிறுவாபுரி அபிஷேக வழிபாட்டுக்குழுவின் 16ம் ஆண்டு விழாவையொட்டி, வரும் 20ம் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. காலை 7 மணிக்கு அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது. லட்சார்ச்சனைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, வடபழனி முருகன் கோவில் அருகேயிருந்து, சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

source ; Dinamalar