Nagaratharonline.com
 
ஒக்கூர் : பிளஸ் 2 தேர்வில் பதட்டம்  Mar 14, 11
 
பிளஸ் 2 கேள்வித்தாளை குறைத்து அனுப்பியதால், தேர்வு தாமதமாக துவங்கியது.

ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் தேர்வு நடந்தது. இதில் 123 மாணவர்கள் எழுதினர். ஆனால் 83 கேள்வித்தாள் மட்டுமே இருந்தது. திடீரென ஏற்பட்ட குழப்பத்தால் மாணவர்கள் பீதியடைந்தனர். ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி, மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கேள்வித்தாளுக்கு ஏற்பாடு செய்தனர். இதனால், மாணவர்கள் நீண்ட நேரம் தவித்தனர்.
மாணவர்கள் கூறுகையில், "கேள்வித்தாள் இல்லாததால் பதட்டம் ஏற்பட்டது. படித்தவை மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்,' என்றார்.

source : Dinamalar