Nagaratharonline.com
 
"ஆம்னி பஸ்'களையும்கண்காணிக்க உத்தரவு  Mar 13, 11
 
பணப்பட்டுவாடாவை தடுக்க "ஆம்னி' பஸ்களையும் கண்காணிக்க, தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால், பல இடங்களில் நடந்த வாகன சோதனையில் கட்டுக் கட்டாக பணம் பிடிபட்டது. இதையடுத்து, வேறு ஏதேனும் வகைகளில் பணநடமாட்டம் இருக்கலாம், என கருதிய தேர்தல் கமிஷன் தற்போது, ஆம்னி பஸ்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.வெளியூர் செல்லும், மதுரை வரும் ஆம்னி பஸ்களில் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களை சோதனையிட பறக்கும் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் பொருட்களுக்கும், ஒரு லட்சத்திற்கு மேல் பணம் இருந்தால் அதற்கும், உரிய ஆவணங்கள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பஸ்களில் அனுப்பும் பொருட்களுக்கான அசல் ஆவணங்களும் இருக்க வேண்டும்.

source : Dinamalar