Nagaratharonline.com
 
முப்பெரும் விழா - தேவகோட்டை  Nov 5, 09
 
தேவகோட்டை, நவ.4: தேவகோட்டை அருகேயுள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரையில் உள்ள ஸ்ரீ சர்வ தீர்த்தேஸ்வரர் கோயிலில் ஐப்பசி முப்பெரும் விழா நடைபெற்றது. கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமையில் கோ பூஜை, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், திருவாசகம் முற்றோதுதல் ஆகியவைநடைபெற்றன.

தெய்வீகக்குழுத் தலைவர் பாண்டியன் வரவேற்றார். செட்டியப்பன், அழகப்பன், மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்தினர்.
ஏற்பாடுகளை காளிமுத்து மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

Source: Dinamani 11/5/2009