Nagaratharonline.com
 
கோட்டையூர் அழகாபுரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கலசம் திருட்டு  Mar 10, 11
 
காரைக்குடி அருகே கோயில் கலசம் திருடிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு கோட்டையூர் ரயில்வே கிராசிங் அருகே, இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன், எஸ்.ஐ., லட்சுணமன் தலைமையில் போலீசார், வாகன சோதனை செய்தனர். மாருதி காரில் சோதனை செய்த போது, கோபுர கலசம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.விசாரணையில், கோட்டையூர் அழகாபுரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கலசம் என, தெரிந்தது. அதை திருடியதை காரில் வந்தவர்கள் ஒப்புக் கொண்டனர்.நாகர்கோவில் அருள்ரஜீப் (29), நிலக்கோட்டை ரவி (29), ராஜபாண்டி (36), பாண்டியன் (32), இளையபெருமாள் (37), கமுதி முத்துராமலிங்கம் (46), காளையார்கோவில் ஆனந்தகுமார் (27), காரைக்குடி அண்ணாநகர் தர்மலிங்கம் (45) கைது செய்யப்பட்டனர்.இன்ஸ்பெக்டர் கூறுகையில், ""இவ்வழக்கில் மேலும் பலர் சிக்குவர்,'' என்றார்.

source : Dinamalar