Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் 7 பவுன் கொள்ளை  Mar 7, 11
 
பொன்னமராவதியில், நகை வியாபாரி மனைவியிடம் 7 பவுன் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் சண்முகம். நகை வியாபாரி. இவரது மனைவி பராசக்தி((வயது34).

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு, புதுக்கோட்டைக்கு சென்று விட்டு பொன்னமராவதிக்கு பராசக்தி, பஸ்சில் திரும்பினர். பின்னர் வீட்டுக்கு செல்ல ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு செல்போனில் பேசியபடி ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். திடீரென பராசக்தி கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

source : Maalaimalar