Nagaratharonline.com
 
அதிகாரிகள் கண்காணிப்பில் வட்டிக்கடை,அடகு கடைகள்  Mar 5, 11
 
தேர்தலை முன்னிட்டு பான்புரோக்கர், மணி லெண்டர் கடைகளுக்கும் தேர்தல் கமிஷன் செக் வைத்துள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வங்கியில் கணக்கு வைத்து தேர்தல் செலவை நடத்த உத்திரவிட்டுள்ளது. மேலும் வங்கிகளிலும் ஒரு லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பதையும் கண்காணிக்க தேர்தல் கமிஷன் உத்திரவிட்டுள்ளது.இதில் வங்கிகள் மட்டுமின்றி தனியார் வட்டிக்கடை, அடகு கடைகளும் கண்காணிப்பில் சிக்கியுள்ளன. தங்களிடம் லைசென்ஸ் பெற்றுள்ள பான்புரோக்கர், மற்றும் மணி லெண்டர்களை கண்காணிக்க வருவாய் துறையினருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை இந்த கடைகளும் கண்காணிப்பில் இருக்கும். அதிக அளவில் பணம் பெறுவது குறித்து கண்காணிப்பு உள்ளதால் பான்புரோக்கர்கள், மணிலெண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

source : Dinamalar