Nagaratharonline.com
 
நாச்சியாபுரம் : விபத்து ஏற்படுத்தும் மின் கம்பங்கள்  Mar 5, 11
 
திருப்புத்தூர்- காரைக்குடி ரோட்டில், விபத்து ஏற்படுத்தும் மின் கம்பங்களை மாற்ற வேண்டும். இந்த ரோட்டில் நாச்சியாபுரத்தில் இருந்து கொரட்டி, மானகிரி வரை, மின் கம்பங்கள் உள்ளன. ரோட்டை அகலப்படுத்தி பல ஆண்டுகளாகியும், அதற்கேற்ப கம்பங்களை இடம் மாற்றவில்லை. இதனால் ரோட்டின் குறுக்கே கம்பங்கள் உள் ளன.இருட்டில் இவை தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது.

இரு ஆண்டுகளில் 30 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மின் கம்பங்களை மாற்றி வேறு இடத்தில் நடுவது அவசியம். நாச்சியாபுரம் பள்ளி அருகே வேக தடையும் முக்கியம்.


source : Dinamalar