Nagaratharonline.com
 
நகரத்தார் திருக்கோவில்களில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி  Feb 22, 11
 
காரைக்குடி, பிப். 20:காரைக்குடி திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றம் சார்பில் 96 ஊர் நகரத்தார் திருக்கோவில்களில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி குன்றக்குடியில் நடைபெற்றது. கவிஞர் அரு. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற திருவாசகம் கருத்தரங்கில் ஈப்போ நாராயணன், தெ.சொக்கலிங்கம், எழுத்தாளர் தங்கராஜ், முத்தையா, சபாரத்தினம், செந்தில் முருகப்பன், பொறியாளர் அருணாச்சலம், சண்முகம், ராமசாமி ஆகியோர் பேசினர். குன்றக்குடி ஆதீன திருமடத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றன. மாணிக்கம் நன்றி கூறினார்.

source : Dinamani