Nagaratharonline.com
 
பழநி தங்க தொட்டிலுக்கு 65 பக்தர்கள் காணிக்கை  Feb 21, 11
 
பழநி கோயில் பிரார்த்தனை தங்க தொட்டிலுக்கு, ஒரே நாளில் 65 பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
பழநி கோயிலில், தங்க தொட்டிலில் குழந்தைகளை படுக்க வைத்து நேர்த்திக்கடன் செலுத்த எட்டு கிலோ தங்கத்தால் ஆன தங்கத்தொட்டில், கடந்த பிப்., 6ல் துவக்கி வைக்கப்பட்டது.

ஒரு குழந்தையை தங்க தொட்டிலில் வைத்து ஆட்ட 300 ரூபாய் காணிக்கையாக செலுத்த வேண்டும்.கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் 65 பக்தர்கள் தங்க தொட்டிலுக்கு காணிக்கை செலுத்தியிருந்தனர். காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் இரண்டு அரை கிலோ பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், சந்தனம், விபூதி வழங்கப்பட்டது

source : Dinamalar