Nagaratharonline.com
 
தெய்வத் தொண்டு புரிந்தவர் தெரு ஓரத்தில்  Feb 20, 11
 
விபத்து ஏற்பட்டு நடக்க முடியாமல் ஆதரவற்ற நிலையில் தவிக்கிறார், கோயில் ஓதுவார் சண்முகம் (76).குன்றக்குடியை சேர்ந்த இவர், அமராவதி புதூர், கொத்தமங்கலத்தில் உள்ள கோயில்களில் ஓதுவாராக வேலை செய்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. வயது முதிர்ந்த நிலையில் காரைக்குடி கோயில்களில் பூக்கட்டுதல், சுவாமி சிலைகளுக்கு சந்தனம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை செய்தார்

.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ மோதி காலில் காயமுற்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆப்பரேஷன் செய்து "பிளேட்' பொருத்த வேண்டும் என, தெரிவித்தனர். உறவினர்கள் இவருக்கு உதவி செய்ய முன்வராததால், கடந்த ஐந்து மாதமாக நகர சிவன் கோயில் அருகே படுத்த படுக்கையாக கிடக்கிறார்.மனிதாபிமானம்: அப்பகுதியை சேர்ந்த சிலர் இவரின் நிலையை உணர்ந்து, உணவு வழங்கி வருகின்றனர். தெய்வத் தொண்டு புரிந்த இவர், ஆதரவற்ற நிலையில் தவிக்கிறார்.

தன்னார்வ நிறுவனங்கள் இவரை பராமரிக்க முன் வரவேண்டும்.சண்முகம் கூறுகையில், ""சிகிச்சைக்கு உதவி செய்தால் போதும். கூலி வேலை செய்து பிழைத்து கொள்வேன். யாரும் உதவ முன்வரவில்லை,'' என்றார், கண்ணீர் மல்க

source : Dinamalar