Nagaratharonline.com
 
கண்டனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு  Feb 8, 11
 
காரைக்குடி, பிப். 7: காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம், கண்டனூர் பேரூராட்சிக்கு 2009-10-ம் ஆண்டின் பகுதி-2 திட்டத்தின் கீழ் மற்றும் பொது நிதி என ரூ.23.85 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்தார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம் முன்னிலை வகித்தார். சாக்கோட்டை ஊராட்சி

ஒன்றியக்குழுத் தலைவர் சுப. முத்துராமலிங்கம், ஊராட்சி உறுப்பினர் சுப.துரைராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சொ.தெய்வநாயகம், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் சு.கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்டனூர் பேரூராட்சித் தலைவர் செ.ராமசாமி வரவேற்றார். துணைத் தலைவர் பி.ஆர். அருணாசலம், உள்துறை அமைச்சருக்கு வரவேற்புக் கவிதை வாசித்தார். செயல் அலுவலர் கா.ராஜகோபால் நன்றி கூறினார்.

முன்னதாக மதியம் காரைக்குடி அருகே மானகிரியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகி யோரை மாணவர் காங்கிரஸ் அமைப்பின் புதிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


Source:Dinamani