Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் கூட்டுறவு விற்பனைச் சங்க மருந்து, அரிசிக் கடைகள் திறப்பு  Feb 7, 11
 
புதுக்கோட்டை, பிப். 6: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் மருந்துக் கடையும் அரிசிக் கடையும் திறக்கப்பட்டுள்ளன.

திருமயம் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள நியாய விலை மருந்துக்கடையை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் ராம. சுப்புராம் திறந்துவைத்தார்.

முதல் விற்பனையை மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மு. பழனிவேலு தொடக்கிவைத்தார்.

இம்மருந்துக்கடையில் அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து 10 சத தள்ளுபடி விலையில், வாடிக்கையாளர்கள் மருந்துகளைப் வாங்க முடியும்.

தொடர்ந்து, கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்ட அரசிக் கடையை பேரூராட்சித் தலைவர் கே.எம். லெட்சுமணன் திறந்துவைத்தார். விழாவில், புதுக்கோட்டை சரக துணைப் பதிவாளர் சிவ. சுந்தர்லால், துணை பதிவாளர் ஜெயராசு, சார்பதிவாளர் வேல்ச்சாமி, தொட்டியம்பட்டி ஊராட்சித்தலைவர் ஆர். சோலையப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை திருமயம் கூட்டுறவு விற்பனைச் சங்க தனி அலுவலர் எஸ். பாண்டித்துரை, செயலர் சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


Source:Dinamani