Nagaratharonline.com
 
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு  Feb 4, 11
 
பத்தாம் வகுப்புப் படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

.இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 22லிருந்து 28 வயதுக்குட்பட்ட பொதுப்பணியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு நிறை வான ஊதியத்துடன், இதர சலுகைகளும் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்குத் தகுதியுள்ளவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். விருப்பமும், தகுதியும் உடையவர்கள், தங்கள் சுய விவரங்களடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் போன்றவற்றின் ஒரிஜினல் மற்றும் அதன் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 போட்டோக்கள் ஆகியவற்றுடன் சென்னை அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையிலுள்ள அயல் நாட்டு வேலை நிறுவனத்துக்கு பிப்.7 காலை 9.00 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு வரலாம்.

இதுதொடர்பான விபரங்கள் தேவைப்படுவோர், 044-2446 4268, 9403 93617, 99529 40460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

source : Dinamalar