Nagaratharonline.com
 
சென்னை காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்  Feb 4, 11
 
சென்னை தம்புச் செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கு ராஜகோபுர கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது.காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மன்னர் சிவாஜி, பாரதி, மகோ யோகியும் பூஜித்து வழிபட்ட தலம்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 1983ல், கிழக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. மேற்கு வாயிலிலும் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் விருப்பம் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து, சிவாச்சார்யார் அறக்கட்டளை சார்பில், 2004ல், மேற்கு வாயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.


இதை தொடர்ந்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. ஐந்து நாட்கள் யாக பூஜை நேற்று முன்தினம் துவங்கின.வரும் திங்களன்று காலை 9 முதல் 10 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது.

source : Dinamalar