Nagaratharonline.com
 
கண்டனூர் பள்ளியில் இலக்கியமன்ற விழா  Oct 26, 09
 
காரைக்குடி, அக்.25: காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி நினைவு உயர் நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற விழா நடைபெற்றது.

தலைமையாசிரியர் பி. சின்னையா தலைமை வகித்துப் பேசினார். தமிழர் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் ச.மீ. ராசகுமார், சண்முகநாதபுரம் பள்ளித் தலைமையாசிரியர் ராமதிலகம் ஆகியோர் பேசினர். பள்ளிச் சிறார்களுக்கான கண்ணொளித் திட்டத்தின் கீழ் 80 மாணவர்களுக்குக் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக தமிழாசிரியர் வீர. முத்துப்பழனியப்பன் வரவேற்றார். சொ. தெய்வானை நன்றி கூறினார்.

Source: Dinamani Oct 26