Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் கோயிலில் நகை, பணம் திருட்டு  Feb 1, 11
 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் செüமியநாராயணப் பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோஷ்டியூர் செüமிய நாராயணப் பெருமாள் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருடர்கள் புகுந்து, கருவறை அருகேயுள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயிலைத் திறந்தபோது உண்டியலை உடைத்து நகை, பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், திருப்பத்தூர் டி.எஸ்.பி. முருகேசன். இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். .

கடந்த ஆண்டு கோயில் உண்டியலில் ரூ. 5 லட்சம் சேர்ந்ததாக நிர்வாகத்தினர் கூறினர். கோயிலில் உள்ள 9 உண்டியல்களில் கருவறை அருகேயுள்ள திருட்டுப்போன உண்டியலில் பல லட்சம் ரூபாய் பணம், நகை இருக்க வாய்ப்புள்ளது.இக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸôர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

source : Dinamani