Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் வீபீஷண சேவை  Jan 31, 11
 
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், நாளை வீபீஷண சேவை நடக்கிறது. அன்று காலை சந்திபூஜையுடன் துவங்குகிறது. 9.30க்கு அபிஷேகம், உற்சவருக்கு ஏகாந்த அலங்காரம் நடக்கும். கைத்தலத்தில் விபீஷணனுக்கு காட்சி தருவார்.

கட்டியக்காரர் கட்டியம் வாசிக்க மூலவர் சன்னி தானத்தில் மூன்று படிகளில் உற்சவர் நடந்துவர, மும்முறை தீபாராதனை நடக்கும். ஆஸ்தானம் திரும்புதலுடன் வீபிஷணனுக்கு பெருமாள் தரிசனம் தருவார்.

தை அமாவாசையன்று வீபிஷணனுக்கு மோட்சம் அளிக்க பெருமாள் தரிசனம் அளிப்பது ஐதீகம். வைணவ கோயில்களில் திருக்கோஷ்டியூரில் மட்டுமே இச்சேவை நடக்கும்.


source : Dinamalar