Nagaratharonline.com
 
தட்கல்' டிக்கெட்டுக்கும் அடையாள அட்டை  Jan 31, 11
 
`தட்கல்' டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் இனிமேல் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

`தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏஜெண்டுகளும்,மொத்தமாக முன்பதிவு செய்பவர்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும்,அதனால் 'தட்கல்' டிக்கெட் பெறச் செல்லும் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

இந்த புகாரையடுத்து,'தட்கல்' டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் இனிமேல் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறையை சேர்த்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : webdunia