Nagaratharonline.com
 
மதகுபட்டி : வாரச்சந்தையை பராமரிக்க கலெக்டர் உத்தரவு  Jan 30, 11
 
மதகுபட்டி வாரசந்தையில் துப்புரவு பணிகளை முறையாக மேற்கொள்ள கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார்

இங்கு, வாரந்தோறும் வியாழனன்று சந்தை கூடுகிறது. மதகுபட்டி, அலவாக்கோட்டை, அழகமாநகரி உள்ள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். சந்தையில் அடிப்படை வசதியில்லை. மேலும் அங்கு தேங்கும் காய்கறி கழிவு, இறைச்சி கழிவுகளை ஊராட்சி ஊழியர்கள் அகற்றுவதில்லை.

சந்தைக்கு அருகிலேயே வி.ஏ.ஓ., மின்வாரியம், ரேஷன் கடை போன்று பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அலுவலகங்கள் உள்ளன. இங்கு தேங்கும் கழிவுகளை அகற்றாததால், துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இது குறித்து, கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அவர், சந்தையை ஆய்வு செய்து அங்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளையும், துப்புரவு பணிகளை முறையாக செய்யுமாறு உத்தரவிட்டார். பி.டி.ஓ., மாரியப்பன், ஊராட்சி தலைவர் வயிரவன், துணை தலைவர் நாராயணன் உடனிருந்தனர்.

source : Dinamalar