Nagaratharonline.com
 
பணிகள் தேக்கம்  Oct 23, 09
 
பாகனேரி: மதகுபட்டி, ஒக்கூர், நகரம்பட்டி, காடனேரி, கீழப்பூங்குடி, அலவாக்கோட்டை கிராமங்களில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக உதவி பொறியாளர், திட்ட பணிகள் தயாரிக்கும் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள் ளன. இதனால் நூறுக்கும் மேற்பட்ட சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற முடியவில்லை. மின் இணைப்பு தடைபட்டால் சரி செய்ய நான்கு நாட் களாகிறது. மின் அளவு கணக்கீடு செய்யவும் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் உத்தேச மதிப்பீட்டின்படி கட்டணம் விதிக்கப்படுவதாக இணைப்புதாரர்கள் கூறுகின்றனர். குறைகள், பணிகள் குறித்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க பல மாதங்கள் ஆகிறது.


source : Dinamalar 23/10/09