Nagaratharonline.com
 
தேவகோட்டை ஷீரடி சாய்பாபாகோயில் கும்பாபிஷேகம்  Jan 26, 11
 
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் குடும்பத்தாரால் இக்கோயில் கட்டப்பட்டது. வடஇந்தியாவை போன்று சாய்பாபா அமர்ந்த நிலையில் சிலை மற்றும் சுவர்ண விநாயகர் சன்னதியுடன் அமைந்துள்ளது.
கடந்த 24ம் தேதி அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. கோனேரி ராஜபுரம் சபேசன், கருப்பு குருக்கள் தலைமையில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
அபிஷேகம்:நேற்று காலை 6.30 மணிக்கு யாகசாலையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 10 மணிக்கு கோயில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், பூஜைகள் நடந்தன. நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் - மீனாட்சி ஆச்சி குடும்பத்தினர் வரவேற்றனர்.



அமைச்சர் பெரியகருப்பன், ராமசாமி எம்.எல்.ஏ., கேரளா முத்தாளமடம் சுனில்தாஸ்சுவாமி, யோகிராமன், ஸ்பிக் நிர்வாக இயக்குனர் ஏ.சி.முத்தையா, தேவகி, குமாரராணிமீனா முத்தையா, ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் படிக்காசு, ஐகோர்ட் நீதிபதிகள் சொக்கலிங்கம், ஜெகதீசன், ஈஸ்வரபிரசாத், வெங்கட்நாராயணன், தேஸ்பாண்டே, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஸ்தபதி வடுகநாதன் பங்கேற்றனர்.


Source:Dinamalar