Nagaratharonline.com
 
போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்  Jan 22, 11
 
காரைக்குடி, ஜன. 21: காரைக்குடி நகராட்சியில் ஜன. 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று நகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியது:

காரைக்குடி நகரில் கழனிவாசல் நகர்மன்றக் தொடக்கப் பள்ளி, அண்ணாநகர் வீனஸ் நர்சரி பள்ளி, முத்துப்பட்டணம் மு.வி அரசு மேல்நிலைப் பள்ளி, அருணாநகர் தாய்சேய் நல விடுதி, செக்காலை ராமநாதன் செட்டி யார் நகர்மன்ற நடுநிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் நேஷனல் கேட்டரிங் காலேஜ், முத்தூரணி நகர்மன்ற தொடக்கப்பள்ளி, என்.என்.எல் பஸ் சர்வீஸ் அலுவலகம், நியூடவுண் தாய்சேய் நல விடுதி, ரயில்வே ரோடு சதானந்தா தொடக்கப் பள்ளி, ரயில்வே ரோடு காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளி, முத்தாளம்மன் கோயில் நகராட்சி சுகாதார அலுவலகம், கணேசபுரம் காமராஜர் பிரைமரி பள்ளி, நா.புதூர் நகர்மன்றத் தொடக்கப் பள்ளி, தெற்குத்தெரு நகர்மன்ற நடுநிலைப் பள்ளி, செஞ்சை தாய்சேய் நல விடுதி, செஞ்சை எல்.எப்.ஆர்.சி பள்ளி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரயில்வே ரோடு அரசு மருத்துவமனை உள்ளிட்ட 20 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பொதுமக்கள் தங்கள் வார்டுப் பகுதியில் உள்ள மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயனடையலாம் என்றார்.

Source:dinamani