Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் மக்கள் குறைகேட்பு  Jan 22, 11
 
புதுக்கோட்டை, ஜன. 21 பொன்னமராவதியில் மக்கள் குறைகேட்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கோட்டாட்சியர் எம். கங்காதரன் தலைமை வகித்தார். முகாமில் பல்வேறு கோரிக்கைகளுடன் 107 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பேரூராட்சித் தலைவர் கே.எம். லட்சுமணன், ஒன்றியக் குழு உறுப்பினர் அ. அடைக்கலம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகர், தேர்தல் துணை வட்டாட்சியர் எஸ். ரவிச்சந்திரன், வேளாண் துறை அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, வட்டாட்சியர் சி. பாஸ்கர் வரவேற்றார். நிறைவில், தனி வருவாய் அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


Source:Dinamani