Nagaratharonline.com
 
குழிபிறையில் இலக்கிய விழா  Jan 21, 11
 
புதுக்கோட்டை,ஜன. 20: புதுக்கோட்டை அருகேயுள்ள குழிபிறையில் இலக்கிய விழா அண்மையில் நடைபெற்றது.

மீனாட்சி இலக்கிய கவின் கலை மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு குருவிக்கொண்டான்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி ராமநாதன் தலைமை வகித்தார். எல். சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

மன்றச் செயலர் கவிஞர் வி.கே. கஸ்தூரிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். தமுஎகச துணைத் தலைவர் நா. முத்துநிலவன், கவிஞர்கள் தாமரைச்செல்வன், மு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் இன்னாசிமுத்து, ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

முன்னதாக, மன்றத் தலைவர் அழகப்பன் வரவேற்றார். நிறைவில் ஆசிரியர் முத்துராமன் நன்றி கூறினார்.

Source:Dinamani