Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்  Jan 20, 11
 
திருப்பத்தூர், ஜன. 19: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் செüமிய நாராயணப் பெருமாள் கோவிலில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜன. 21) நடைபெற உள்ளது.

இந் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சயனபெருமாள் சந்நிதியில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், பெரிய பெருமாளிடம் பிரியா விடை பெற்று திருக்கதவுகள் பூட்டப்பட்டன.

சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்களுக்கு திருப்பாவை விளக்க உரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை ஆண்டாள் தைலக்காப்பு மண்டபத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்ற பின், தைலம் சார்த்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் நவகலச அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

Source:Dinamani