Nagaratharonline.com
 
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கார் “பார்க்கிங்”வசதி  Jan 18, 11
 
கோயம்பேடு பஸ் நிலையத்தில் தரைதள 2 அடுக்கு இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் புதிதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக மோட்டார் சைக்கிள் நிறுத்த முடிகிறது. 2500 முதல் 3000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இதுவரை பஸ்நிலையத்தில் வழிநெடுக சைக்கிள் நிறுத்தப்பட்டு வந்தது.


தற்போது புதிய நவீன வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டதன் மூலம் நெரிசல் குறைந்தது. வழியில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எல்லா மோட்டார் சைக்கிள்களும் வாகன காப்பகங்களில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே வாகனங்கள் நின்ற இடங்களில் கார் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

source : Maalai malar