Nagaratharonline.com
 
மொபைல் போன்களில் 'சிக்னல்' பிரச்னை  Oct 23, 09
 
திருப்புத்தூரில் பி.எஸ்.என்.எல்., போன் "டவர்' கள் செயல்படாததால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.
செவ்வூரில் "டவர்' பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் செயல்படவில்லை. இளையாத்தங்குடி, செண்பகம்பேட்டையில் கடந்த ஆறு மாதமாக இயங்கவில்லை. புழுதிப்பட்டியில் "டவர்' இருந்த போதும் மொபைல் போன்களில் "சிக்னல்' பிரச்னை நீடிக்கிறது. இதன் "ஆன்டெனா' சரியாக பொருத்தப்படாததால் பிரச்னை உள்ளதாக தெரிகிறது. கண்டவராயன்பட்டி, பூலாங்குறிச்சி வாடிக்கையாளர்களுக்கும் "சிக்னல்' பிரச்னை உள்ளது. "டவர்' கள் முழுமையாக செயல்படவும், புதியவை அமைக்கவும் ஆய்வு நடத்த வேண்டும். காரைக்குடி பி.எஸ்.என்.எல்., மூலம் 90 "டவர்' அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளின் போது "சிக்னல்' பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


source : Dinamalar 23/10/09