Nagaratharonline.com
 
ஆராய்ச்சியாளருக்கு பாராட்டு விழா  Jan 17, 11
 
கண்ணாடி இழை கேபிள் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் முன்னோடியாளரும், அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாண டல்லாஸ் பல்கலைக்கழக கணினித்துறை பேராசிரியருமான இலக்குவன்தமிழுக்கு காரைக்குடியில், மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பாராட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடியைச் சேர்ந்த இலக்குவன்தமிழன் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி, அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்தவர். 1998-ல் அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். மேலும் 18-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான உரிமத்தையும் பெற்றுள்ளார். ஆப்டிக் சொசைட்டி ஆப் அமெரிக்கா என்ற அமைப்பு இவரை பெலோ என பாராட்டி உள்ளது.

source : Dinamani