Nagaratharonline.com
 
பாம்பன் பாலம் டோல்கேட் கூடுதல் வசூல் 2பேர் கைது  Jan 16, 11
 
மண்டபம் -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காந்திநகர் பகுதியில் பாம்பன் பாலம் ஏறும்முன் டோல்கேட் உள்ளது. இதை பரமக்குடியை சேர்ந்த தமிழ்செல்வன் குத்தகை எடுத்துள்ளார்.

நேற்று தனியார் டிவி நிருபர் காளிதாஸ் காரில் ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்றார். காந்திநகர் டோல்கேட்டில் காருக்கு 10 ரூபாய் டிக்கட்டுக்கு கூடுதலாக 10 சேர்த்து 20ரூபாய் வசூல் செய்துள்ளனர். காளிதாஸ் புகாரின்படி மண்டபம் போலீசார் கூடுதல் கட்டணம் வசூல் செய்த இருளாண்டி(26),செந்தில்(28)ஆகியோரை கைது செய்தனர். சீசன் காலங்களில் டோல்கேட்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாக நடந்தும், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாதது குறிப்பிடதக்கது.

source : Dinamalar