Nagaratharonline.com
 
பழனி தைப்பூச விழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்  Jan 15, 11
 
மதுரை, ஜன.13: பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து பொது மேலாளர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜன.20-ம் தேதி நடைபெறவுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்தும், அதனைச் சார்ந்த பகுதிகளில் இருந்தும் பழனிக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்கேற்ப பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

இதேபோல் பழனியிலிருந்தும் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. ஜன.18 முதல் 21-ம் தேதி வரை அதிகளவு சிறப்புப் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தைப்பூச திருவிழாவுக்கு 170 சிறப்பு பஸ்களும், தேவைக்கு ஏற்ப அதிக பஸ்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

source ; dinamani.