Nagaratharonline.com
 
சிராவயல் மஞ்சுவிரட்டு : காளைகள் பதிவு துவக்கம்  Jan 12, 11
 
திருப்புத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டிற்காக காளை பதிவு பணிகள் துவங்கியது. மாவட்டத்தில், சுப்ரீம் கோர்ட் ஏழு இடங்களில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

அதில் சிராவயல் மஞ்சுவிரட்டு ஜன.,17ல் நடக்கிறது. இங்கு, பங்கேற்கும் காளைகள் பதிவு செய்யும் பணி துவங்கியது. இது குறித்து ஊராட்சி தலைவர் வேலு கூறுகையில், "" மஞ்சுவிரட்டிற்கான காப்பீட்டு பிரீமிய தொகை 2 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளோம். நேற்று முதல் இங்கு பங்கேற்கும் காளைகளின் பெயர் பதிவு செய்யப்படுகிறது. காளை ஒன்றிற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வரை 13 காளைகள் பதிவு செய்துள்ளது. எஸ்.பி., ஆய்வு: மஞ்சுவிரட்டு பொட்டலில் பாதுகாப்பு வழங்குவது குறித்து ராஜசேகரன் எஸ்.பி., ஆய்வு செய்தார்.

source : Dinamalar